21 ( 2 ) உட்கூறின் கீழ் விடுக்கப்படும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பட்டியல் பழங்குடியின மரபினருக்கான பட்டியலிலிருந்து ஒரு குடியினரை அல்லது அந்த குடியின் பிரிவைப் புதியதாக சேர்ப்பதற்கும் , நீக்குவதற்கும் சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உண்டு , அவ்வாறு சொல்லப்பட்ட முறையிலின்றி அவற்றில் கூறியபடி வெளியிட்டுள்ள அறிவிப்பில் எத்தகைய மாற்றத்தையும் செய்யக்கூடிய மற்றோர் அறிவிப்பை வெளியிடுதல் கூடாது . மேலும் பிரிவு 366 ( 24 ) சொற்பொருள் விளக்கத்தின்படி பட்டியலின பழங்குடி மரபினர் என்பது , இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 342 ன் கீழ் அத்தகைய மரபினர் அல்லது குழுவினர் என்று கருதப்படும் பழங்குடியினரைக் குறிப்பதாகும் . தேசிய பட்டியிலின மற்றும் பழங்குடியினர் அமைச்சகத் திலிருந்து பழங்குடி மக்களுக்கான தனி அமைச்சரகம் 1999 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமைக்கப்பட்டது . தேசிய பழங்குடியினர் ஆணையம் , 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி அமைக்கப்பட்டது . ஒரு சமூகம் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டால் , மத்திய , மாநில அரசுகள் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு , உயர் கல்வி நிறுவனங் பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீடு சட்டமன்ற , பாராளுமன்ற தொகுதிகளில் ஒதுக்கீடு , கல்விக் கட்டணத்தில் சலுகை , சிறப்பு பயிற்சி , வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களில் படிக்க நிதி உதவி ஆகியவைகளைப் பெறமுடியும் . மேலும் கூட்டுறவு வங்கி , கூட்டுறவு விற்பனையகம் , சமூக வளங்களை சமூக கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் உரிமை , சிறப்பு ஆட்சியமைப்பு என்று இன்னும் பல சலுகைகளும் உரிமைகளும் கிடைக்கும்
தமிழ்நாடு பருவதராஜகுல மீனவர் சங்கம் (பதிவு எண் S-1of 1931 -32)
No comments:
Post a Comment